சென்னை: நாளை (21-ம் தேதி)  திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அமைச்சர் துரை முருகன் அறிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி,  கூட்டத்தொடர்ந்து  29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,  நவம்பர் 21-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என என கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.