டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள  திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள்நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து ராகுல்காந்தியையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

டெல்லியில்  திமுகவுக்கு கட்சிக்கு பாஜக கட்சி  அலுவலகம் அமைந்துள்ள  தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  அண்ணா அறிவாலயம் என பெயர் சூட்டப்படும் இந்த கட்டி திறப்பு விழா ஏப்ரல் 2ந்தேதி நடைபெற உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சோனியாகாந்தி, ராகுல்காந்தி,  மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.