கோவை: பத்மஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் கோவை பாப்பம்மாளை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

103 வயதிலும் விவசாயம் செய்து வாழ்ந்துவரும் மூதாட்டி பாப்பம்மாளுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து கௌரவித்துள்ளது. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக நல அமைப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன்!

உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி என்று குறிப்பிட்டு உள்ளார்.