தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே. எஸ். அழகிரி அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் – காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை 2006 முதல் தொடர்ந்து நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2006ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற அவர் பிறகு 2011 முதல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.