சென்னை

வரும் 8 ஆம் தேதி அன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கிறது. 

வரும் 8 ஆம் தேதி அன்று மாநில உரிமைகள் காத்திட மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

வரும் 8 ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்கும் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.