துரகிரி

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கமாகும்.

தை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர்.

பக்தர்கள்  காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் தங்குவதற்கும், ஆற்றுப் பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

சதுரகிரி மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலை ஏறத் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.கோவில் நிர்வாகத்தினர்  பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றனர்.