சென்னை: திமுக கட்சியின்  15வது பொது தேர்தல் தொடர்பாக,  சென்னை மாவட்டங்களில் உள்ள வட்டங்கள் விவரங்களை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெற்ற மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட வாரியாக அனைத்து பதவிகளும் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,  திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களில் பகுதி கழக தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் வட்டங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.