சென்னை:
ரும் மார்ச் 7-ம் தேதி, ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகம், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளும் பொருட்டு திமுக பொதுக்குழு மார்ச் 7-ல் கூடவிருப்பதாகக் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திமுக பொதுக்குழுக் கூட்டம், சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.