சென்னை

சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டிக் கொல்லப்பட்டதால் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பெரியார் பகுதியில் வசித்து வந்த செல்வம் திமுக 188 ஆ,ம் வார்டின் வட்டச் செயலாளர் ஆவார்.  சுமார் 38 வயதாகும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.   நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியைப் போட்டியில் வைக்க ஏற்பாடுகள் செய்து வந்தார்.

நேற்று இரவு அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த செல்வத்தை அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடி உள்ளது.  செல்வத்தின் ஆதரவாளர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.   அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே மரணம் அடைந்ததாக தெரிவித்தன.ர்

மடிப்பாக்கம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து செல்வம் உடலைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   இந்த கொலை அரசியல் ரீதியாக நடந்ததா அல்லது தொழில் போட்டியா என விசாரணை நடந்து வருகிறது.   ஆளும் கட்சி வட்ட செயலாளர் கொலை செய்யப்பட்டதால் மடிப்பாக்கத்தில் கடும் பதட்டம் ஏற்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.