சென்னை:  திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் 03-09-2020 அன்று (வியாழன்) காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும்” என திராவிட முன்னறேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3ந்தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில்  எனது தலைமையில், மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்  காணொளி காட்சி வாயிலாக நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.