சென்னை: மருத்துவரான டாக்டர் எழிலன், திமுக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
கொரோனா கவச உடையுடன் கொரானா சிகிச்சை பிரிவில். அவர் பணிக்கு சென்றிருக்கும் புகைப்படத்துடன்,  “நீங்கள் தான் வந்து பார்க்க வேண்டும் “என்று என் patients கூப்பிடும் போது …. ஓய்வுக்கு ஓய்வு தான்…  என டிவிட் பதிவிட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை  பற்றுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல், வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார். எளிமையாகவும், இனிமையாகவும் பழகும் அவர், ஆயிரம் விளக்கு தொகுதி மக்களைச் சந்தித்து வீடுவீடாக வாக்கு சேகரித்து பெரும் வரவேற்பை பெற்றார். அவரது வெற்றி உறுதியாகி இருப்பதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், டாக்டர் எழிலன் மீண்டும் கொரோனா வார்டில் பணிக்கு   சென்றுள்ளார். இது பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

ஆயிரம்விளக்கு தொகுதியில், டாக்டர் எழிலனை எதிர்த்து,  அதிமுக  கூட்டணி கட்சியான பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.