க்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில், அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:

“நடிகர் ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு  கிடையாது. ஆகவே அக் கட்சி,  ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை.

தமிழகத்தில் காங்., பாஜக வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட்டால் அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்றார்.

மேலும், “ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறு.  அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

இந்து நம்பிக்கையை  அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த ஐம்பது  ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர் .  ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று குருமூர்த்தி பேசினார்.