சென்னை

தேமுதிகவின் பலத்தை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபிப்போம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வரும் 6 மற்றும் 9 ஆம் தேதி தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்  இரண்டு கட்டமாக நடக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது. அதிமுகவும் தேர்தலைச் சந்திக்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்

”தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.”

எனப் பதிந்துள்ளார்.