சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக, தேமுதிக கூட்டணி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தேமுதிக அமமுகவுடன்  கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தொகுதிகள் ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்ததால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இருந்து வந்தது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அமமுக மறுபக்கம் ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வந்தது.

இந் நிலையில், அமமுக, தேமுதிக கூட்டணி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன்.

விரைவில் கூட்டணி அறிவிப்புடன், தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.