சென்னை: கொரோனாவில் இருந்து குணமான விஜயகாந்தும்,அவரது மனைவியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இருவரும் மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். இந் நிலையில், அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்பட்டது.
இருவரும் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை  தெரிவித்தது. அதனை தொடர்ந்து விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.