சென்னை:
ரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து, தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

இதனையடுத்து அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திவிட்டதாகவும், சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.