சென்னை:
ரசு பஸ்களில் தீபாவளி பயண முன்பதிவு இன்று துவங்கியது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான அரசு பஸ்களுக்கு, இன்று முதல் முன்பதிவு துவங்க உள்ளது. இந்த டிக்கெட்களை அரசு போக்குவரத்துக் கழகத்தின், ‘www.tnstc.com’ இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், அடுத்த மாதம், 21ம் தேதிக்கு, அரசு பஸ்களில் பயணிக்க திட்டமிடுவோர், இன்று முதல் முன்பதிவு செய்யலாம். அக்டோபர் 22ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்ய திட்டமிடுவோர் நாளையும், 23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை புறப்பட திட்டமிடுவோர், நாளை மறுநாளும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.