தமிழில் கிரி, குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.

இவர் இறந்ததாக இன்று காலை சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இதனை அவருடன் தொடர்பில் இருக்கும் செய்தியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து திவ்யா ஸ்பந்தனா, “நான் நலமுடன் இருக்கிறேன், விரைவில் இந்தியா திரும்பியதும் உங்களை சந்திப்பேன்” என்று கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள திவ்யா ஸ்பந்தனா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா-வில் உள்ள அவர் குறித்து திடீரென வதந்தி பரவியது எப்படி என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.