பரத்தும், ஜனனியும் ஜோடியாக நடிக்கும் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார், விஜய்ராஜ்.

இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தனது படத்துக்கு ‘முன்னறிவான்’ என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவுக்கு, ஈ.எஸ்.பி என சொல்லப்படும், அசாதாரண நுண்ணறிவு சக்தி உள்ளது.

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே அவனால் கணிக்க முடியும். இதனால், சில சம்பவங்களை அவன் தடுத்து நிறுத்துகிறான்.

ஹீரோவாக நடிக்கும் பரத், ஓட்டல் நிர்வாக படிப்பை முடித்து விட்டு சென்னையில் ஓட்டலில் வேலை பார்க்கிறார். பரத்துக்கு உதவும் டாக்டராக ஜனனி நடிக்கிறார்.

டைரக்டர் கரு.பழனியப்பன், உளவுத்துறை போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவருக்கு உதவியாளராக சிங்கம் புலி.

பரத்தின் தந்தையாக சின்னி ஜெயந்த் நடிக்க உள்ளார்.

‘கலக்கப்போவது யாரு?’ புகழ் அசாரும், மிர்ச்சி செந்திலும் பரத் நண்பர்களாக நடிக்கின்றனர்.

– பா. பாரதி