சாதனை இயக்குனர் கே,பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று, அவரது புகழ் பற்றி பேசி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் பேசியதாவது:
இன்று எனது குருநாதர் கே.பி. சாரின் 90 வது பிறந்த நாள். அவர் என்னை அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் ஒரு நடிகனாகி இருப்பேன். ஆனால் வில்லன் வேடத்தையோ அல்லது , சிறிய கதாபாத் திரங்களையும் செய்துகொண்டிருந்திருப் பேன். அத்தோடு நானும் திருப்தி அடைந் திருப்பேன். ஆனால் நிறைய புகழ் மற்றும் செல்வத்துடன் நான் வசதியாக வாழ கேபி சார்தான் காரணம். அவர்தான் என் பெயரை மாற்றி எனக்குள் இருந்த நெகடிவ்களை நீக்கி எனக்குள் இருந்த பாசிடிவ் எண்ணங்களை மேம்படுத்தி உலகுக்கும் எனக்குமே என்னை காண்பித் தார். அவர் என்னை ஒரு முழுமையான நடிகராக்கினார், நான்கு படங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை எனக்கு தந்து கோலிவுட்டில் அறிமுகப்படுத் தினார் . என்னை பெற்ற என் தாய், தந்தை, என்னை வளர்த்த என் அண்ணன், குரு நாதர் பாலசந்தர் சார் இவர்கள் நான்கு பேரும் எனக்கு தெய் வங்கள். அவர் ஆத்மா எங்கிருந்தாலும் சாந்தமுடன் இருக்கட்டும் என்று வேண்டுகிறேன்’ என தெரிவித்திருகிறார் ரஜினிகாந்த்.
கமல் பகிர்ந்த வீடியோவில் ” பாலசந்தர் என்ற ஒரு பெயர் மட்டுமே ஒரு இளை ஞனாக நான் கேள்விப்பட்ட அவரது புகழை என்னால் உணர முடிந்தது. என்னைப் போன்ற ஒரு நடிகரின் வாழ்க் கையில் அவர் பல வேடங்களில் பங்களிப் பார் என்று யார் தான் நினைத்திருப்பார் கள், பயனாளர், வழிகாட்டி, ஒத்துழைப் பாளர். தந்தை என பல பரிமாணங்களில் என் வாழ்வில் அவர் பங்காற்றினார். இந்திய சினிமாவில் மிகமுக்கிய பங்காற்றிய கேபி எனது வணக்கம்’