ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கினார். பின்னர் கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தை இயக்கினார்.
தற்போது மீண்டும் விஜய் சேதுபதி வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார். விஜய் சேதுபதிக்கு தற்போது ‘புரியாத புதிர்’, ‘கவன்’, ‘விக்ரம் வேதா’, ‘வட சென்னை’ ஆகிய படங்கள் அடுத்த வருடத்தில் வெளியாகும் நிலையில் இருக்கிறது.
இதையடுத்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது கோகுல் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.