ளபதி விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என அடுத்தத்து 3 படங் களை இயக்கியவர் அட்லீ. மீண்டும் பிகில் படத்தின் 2ம்பாகத்தை இயக்க உள்ளதா கவும் அவர் அறிவித்திருப்பதுடன் விஜய் அழைப்புக்காக காத்திருக்கிறார். மேலும் பாலிவுட்டுக்கும், டோலிவுட்டுக்கும் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார் அட்லீ.

இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்காக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக அவருடன் பேசி வருகிறார். பொருத்தமான ஸ்கிர்ப்ட்டுக் காக ஷாருக் காத்திருந்தார். தற்போது அதிரடியான ஸ்கிரிப்டை ஷாருக்கானுக்கு சொல்லி இருக்கிறார் அட்லீ. ரா உளவு அதிகாரியாக இதில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கதை ஷாருக்கிற்கு பிடித்துவிடவே கால்ஷீட் ஒகே சொல்லி இருக்கிறாராம். அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் இதற் கான படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
அமெரிக்கா. இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. கார் சேஸிங் உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஹாலிவுட்டுக்கு இணையாக காட்சிகளை படமாக்க அட்லீ திட்டமிட்டிருக்கிறாராம்.