சென்னை

ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரு ஆடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எஉ. 2000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ம் தேதி டில்லியில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களைத் தயாரித்தது தெரியவந்துள்ளது.

அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.  இயக்குநர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜாபர் சாதிக் உடன் இயக்குநர் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தலாம் என தகவல் வெளியானது. இந்நிலையில் வரும் 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இயக்குநர் அமீர் ஆடியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நான் ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். சிறிதும் தயக்கமில்லாமல், என் தரப்பிலிருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்வேன். நான் 100 சதவிகிதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன்’

என்று தெரிவித்துள்ளார்.