சென்னை

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகர்ன மீண்டும் போட்டியிட உள்ளார்

அ தி மு க அணி மூன்றாக பிரிந்து அவைகளில் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் இணைந்துள்ள நிலையில் டிடிவி தினகரன் அணி தனியாக உள்ளது.   ஜெயலலிதா இறந்த பின் காலியான ஆர் கே நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.   ஆனால் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மேல் புகார் எழுந்ததை ஒட்டி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தற்போது வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஆர் கே நகர் இடைத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வேட்பு மனுக்களை நவம்பர் 27ஆம் தேதி முதல் டிசம்பார் 5 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.    இன்று தினகரனின் அணியின் அவைத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வேட்பாளராக மீண்டும் டிடிவி தினரனை தேர்ந்தெடுத்துள்ளது.   அவர் தனது வேட்பு மனுவை நாளை மறுநாள் தாக்கல் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.