தர்மபுரி:

எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி அணியினர் மாலை அணிவித்தார்கள். பிறகு சிலையை சுற்றியுள்ள பாதுகாப்பு கதவை பூட்டு போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

அதன் பிறகு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அங்கு தினகரன் அணியினர் வந்தனர். சிலையை சுற்றியிருக்கம் கேட், பூட்டு போட்டு பூட்டப்பட்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்தனர்.

பிறகு டூப்ளிகேட் சாவி போட்டு பாதுகாப்பு கதவை திறந்து மாலை அணிவித்தனர். இதனால் அரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.