சென்னை:

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இன்று சந்திக்க முடியாமல் போன தினகரன், நாளை சந்திக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறை விதிகளின்படி, திங்கள், புதன், வெள்ளி மட்டுமே தண்டனை கைதிகளை சந்திக்க பார்வையாளருக்கு அனுமதி தரப்படும். இதர கிழமைகளில் விசாரணை கைதிகளை சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் அடிப்படையில் நாளை சசிகலாவை தினகரன் சந்திக்க முடியாது. எனவே நாளைய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் சிறை வட்டாரத்தில் இருந்து வரவில்லை.