சென்னை: காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்  கூறியுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையினரின் நெடுங்கால கோரிக்கையான, வார விடுமுறை கோரிக்கையை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நிறைவேற்றி உள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  காவல்துறையினருக்கு வாராந்திர ஓய்வு நாள், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறை வழங்க கூறியுள்ளார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபுவின் அறிக்கை குறித்து டிவிட்பதிவிட்டுள்ளார். அதில், ‘தமிழக காவல்துறையின் நீண்ட நாள் கோரிக்கையேற்று வாரத்தில் ஒருநாள், மேலும் பிறந்தநாள் & திருமண நாளில் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலர்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.