சென்னை:
ட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சனை ஆக்குகிறார்கள். இங்குத் தமிழகத்தில் போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்கு தமிழக டிஜிபி உள்ளார். தமிழகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர் நேர்மையான டிஜிபியாக இருந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்றும், ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக டிஜிபி சைலேந்திரபாபு நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.