த்திராயிருப்பு

ன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்க சாமி கோவிலுக்கு 4 நாட்களுக்கு அனுமதி அளிப்பது வழக்கமாக உள்ளது.

சதுரகிரி செல்ல இன்று (15-ந் தேதி) பிரதோஷம், 17-ந் தேதி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

ஆனால் 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. இந்த மலை ஏறுவதற்குக் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   பயணத்தின் போது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இந்த மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்கக் கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை. இதைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.  மேலும் அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேறப் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.