தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 87,70,477 ஆக அதிகரித்திருக்கிறது.

நேற்று 30-5-2021 வரை தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்த 87.7 லட்சம் பேரில் கோவிஷீல்டு 75,05,377 பேருக்கும் கோவாக்சின் 12,65,100 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி முழுமையாக இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 16,91,511.

கோவாக்சின் முழுமையாக இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்கள் 4,27,193.

முதல் டோஸ் மட்டும் போட்டுக்கொண்டவர்கள் கோவிஷீல்டு 58,13,866 கோவாக்சின் 8,37,907.