டில்லி

இன்ற்ய் பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த ஒர் கண்ணோட்டம் இதோ 

நாளுக்கு நாள் ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பயணிகளின் வரவேற்புக்கு ஏற்ப ரயில் சேவையில் பல மாற்றங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்டு வரப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்கள் வசதியான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில் இயக்கப்படுகின்றன.

மேலும் ஏழை, எளிய மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த கட்டணம் கொண்ட அம்ரித் பாரத் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக இன்று 2 அம்ரித் பாரத் ரயில்களைப் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

இவற்றில் ஒரு ரயில் பீகாரின் தர்பங்காவில் இருந்து அயோத்தி வழியாக டெல்லி ஆனந்த் விகார் வரையும் மற்றொன்று மேற்கு வங்காள மாநிலம் மால்டா டவுனில் இருந்து பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரயில் நிலையம் வரையும் இயக்கப்படும்.

சூப்பர் பாஸ்ட் ரயிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், குளிர்சாதன பெட்டி இல்லாத சாதாரண வகை ரயில்களாகவே இயக்கப்பட்டலும் இந்த ரயில்களில் பல்வேறு வசதிகளை ரயில்வே துறை செய்துள்ளது.

இந்த ரயில்களின் முன்புறமும் பின்புறமும் என்ஜின்கள் இருக்கும். வண்ணமயமாக மாற்றப்பட்ட இருக்கைகள், லக்கேஜ்கள் வைக்க போதுமான வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, சிசிடிவி கேமராக்கள், பொது தகவல் அமைப்பு, சென்சார் அடிப்படையிலான தண்ணீர் குழாய்கள் இடம்பெற்றிருக்கும்.

ரயிலில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 8 பொது பெட்டிகள் (முன்பதிவு அல்லாத பெட்டிகள்), 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ரயிலில் 1,600 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரயில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.