யோத்தி

ன்று பிரதமர் மோடி புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளார் 

இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவர் அப்போது 2 அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார்.

அயோத்தி ரயில் நிலையத்தில் இருந்து, தர்பங்கா-டில்லி  அம்ரித் பாரத் ரயில் மற்றும் அயோத்தி- ஆனந்த் விகார் (டில்லி) வந்தே பாரத் ரயில் ஆகிய ரயில்களைப் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கிவைத்தார். இதர ரயில்களை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

அம்ரித் பாரத் ரயில்களின் வழித்தடம்:

1. தர்பங்கா (பீகார்)- ஆனந்த் விகார் (டில்லி). இந்த ரயில் அயோத்தி வழியாக இயக்கப்படுகிறது.

2. மால்டா டவுன் (மேற்கு வங்கம்) – பெங்களூரு விஷ்வேஷ்வரய்யா ரயில் நிலையம் (கர்நாடகா)

வந்தே பாரத் ரயில்களின் வழித்தடம்:

1. ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா (ஜம்மு காஷ்மீர்)- புதுடில்லி

2. அமிர்தசரஸ்- டில்லி

3. கோயம்புத்தூர்- பெங்களூரு கண்டோன்மென்ட்

4. ஜல்னா- மும்பை

5. அயோத்தி- ஆனந்த் விகார் (டில்லி)

6. மங்களூரு – மட்கான் (கோவா)

தமிழகத்தில் ஏற்கனவே 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 5வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி உள்ளது.