சென்னை,

நேற்று தைப்பூசம் மற்றும் சந்திர கிரகணம் நிகழ்ந்த்தால், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நள்ளிரவில் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

தைப்பூசத்தை முன்னிட்டு  நேற்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில், நேற்று சந்திர கிரகணும் நிகழ்ந்தால், நேற்று மாலை முதல் இரவு வரை  சில மணி நேரம் அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு பிறகு மீண்டும் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு நடை திறக்கப்பட்டது.

இந்நிலையில், தைப்பூசத்தன்று முருகனை சந்திக்க பழனி வந்த தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ், இரவு கோவில் நடை திறந்தபிறகு நள்ளிரவு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

சந்திரகிரகணம் காரணமாக மாலையில் கோயில் அடைக்கப்பட்டிருந்ததால், பக்தர்களின் வசதிக்காக இரவு 11 மணி வரை சாமி தரிசனத்திற்க்கு கோயில் நிர்வாகம் திறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.