சென்னை: வரும 14ந்தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் துணைபட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கொரோனா தொற்று காரணமாக, தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை 4 நாட்கள் மட்டுமே நடத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டப்பேரவை பட்ஜெட் மானிய கோரிக்கை  கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 31-ஆம் தேதி  சபை நடவடிக்கைகள் முடித்து வைக்கப்பட்டது. அரசியல் சாசனப்படி, செப்டம்பர் 24ந்தேதிக்குள் சபை மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சட்டமன்றத்தின்  மழைக்கால கூட்டத் தொடர் கூட்டப்படுவதில் தாமதமானது.  இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கல் வரும் 14-ம் தேதி கூடுகிறது.  4 நாட்கள் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அலுவல் ஆய்வுகுழு கூடி முடிவு செய்யும் என சபாநாயக்ர கூறியுள்ளார்.

கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்தஉறுப்பினர்களுக்கு இரங்கல்தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். பின்னர் தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தில், துணை பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

 2020-21-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அரசுக்கு ஏற்படும் எதிர்பாராத செலவுகள், அவசர செலவுகளை ஈடுகட்ட துணை மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு பிறகு, கரோனா பாதிப்பால் தமிழக அரசுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின்  பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த சூழலில், இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் துணை மதிப்பீடுகள் வழக்கமானதாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ள சட்டசபைக்கு வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனை வருக்கும்,  கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.