சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசிடிய போட்டுக் கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26ம் தேதி  வரையிலும் முதற்கட்டமாக 1.40 கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போடும் 2ம் கட்ட பணியானது மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.