சென்னை:
டுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும். இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, பள்ளி கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.