புதுடெல்லி:
டெல்லி போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்புக்குழுதலைவர் விஎம் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டெல்லி போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், குடியரசு தினத்தை சீர்குலைப்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், போராட்டம் திசை மாறியதால், போராட்டத்தை முடித்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.