விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருதுவழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசியல் நோக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி வருகிறது.

இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளான இந்த பத்ம விருதுகள் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக வழங்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உள்ளிட்ட மொத்தம் 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டங்களாக விருது வழங்கப்படும் நிலையில் விஜயகாந்துக்கு நேற்று நடைபெற்ற விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்படவில்லை இதனால் அவருக்கு அடுத்த கட்டமாக நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், தமிழக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடனான கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறாததே இதற்கு காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.