சென்னை: மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாமீதான செல்வ வரி வழக்கில், அவரது வாரிசுதாரர்களான ஜெ.தீபக், தீபாவை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2008  ம் ஆண்டுகளில் செல்வ வரி (wealth tax)  கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.   இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாரயண பிரசாத் அமர்வில் விசாரணைஙக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி  வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விசாரிக்கப்பட்டது.

தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதித்த நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்க வருமான வரித்துறை தரப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.