சென்னை

விரைவில் டி டி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் மாற்றப்பட உள்ளதாக மத்திய அமைசர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை சேப்பாக்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

அமைச்சர் செய்தியாளர்களிடம்,

அனைவரும் முன்பு டிடி பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். என்வே தற்போது மீண்டும் டிடி பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம்.

இதைத் தவிர விவாத நிகழ்ச்சிகள் உள்ளிட்ட புதிய நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.  டிடி பொதிகை தொலைக்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 14-ந்தேதி முதல் ‘டிடி தமிழ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.