சென்னை:

னது மகளின் மறுமணம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி போயஸ் தோட்ட இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு, காவல் நிலையத்தில் மனு செய்துள்ளார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த்.

அதில், போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, தேனாம்பேட்டை ஈ-3 – காவல்நிலையத்துக்கு மனு அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகன் என்ற திமுக பிரமுகரின் மகனுக்கும்  இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. மணமக்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.

சவுந்தர்யா-விசாகன் திருமண நிச்சயதார்த்தம் இரு வீட்டு பெற்றோர் சம்மதத் துடன் சமீபத்தில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  இவர்களுடைய திருமணம் பிப்ரவரி 11-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற இருப்பதாகவும்,  திருமணத்துக்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சி 12-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில், அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பதால்,  போயஸ் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக் கோரி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு மனு அளித்துள்ளார்.