திருநெல்வேலி

டும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த மாதம் தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்தது. இதனால் முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பிறகு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத நிலை உண்டானது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் தேர்வு தேதியை மாற்றி ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆயினும் தென் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தேர்வுகளை நடத்த முடியவில்லை.  அத்துடன் அரையாண்டு தேர்வு விடுமுறையும் வந்ததால் மற்ற பள்ளிகளைப் போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதாவது 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 11 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.