ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியான படம் ‘தர்பார்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சில அரசியல் வசனங்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது .

இந்த நிலையில், மதுரையில் உள்ள சரண்யா கேபிள் நிறுவனம் ‘தர்பார்’ திரைப்படத்தை தன் கேபிள் சேனலில் ஒளிபரப்பியுள்ளனர் .

இதனால் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.