சென்னை:
டகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், தமிழகம் முழுவதும் இருக்கின்ற மீனவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகத் தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். விரைவில் நிவாரண பொருட்களை வழங்குவோம். புயல் போன்ற பேரிடர் காலங்களில் மீனவ குப்பங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மீனவர்கள் தூண்டில் வளைவு அமைப்பது குறித்துக் கேட்டபோது பாதிக்கப்பட்டு வரும் மீனவ பகுதிகளில் தூண்டில் வளைவு, மதில் சுவர் குறுக்குச் சுவர் போன்றவற்றை அமைத்துத் தரப்படும் என்று கூறினார்.

மேலும், மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளுக்குப் பேரிடர் நிவாரணம் மூலம் சேதம் அளவுக்கு ஏற்றார் போல் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.