சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,93,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை அறிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும்  ஊரடங்கை மீறியதாக இதுவரை (5/5/2020)  காலை 9 மணி நிலவரப்படி  3,93,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.4,15,73,819 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.