கடலூர்:
வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிந்துள்ள வாக்குகளை எண்ணும் பொது இந்திய்ரத்தின் திரையிடும் பகுதி பழுதின் காரணமாக மேற்படி கட்டுபாட்டுக் கருவியினை பெல் நிறுவனத்தை சார்ந்த பொறியாளர்கள் பழுது பார்த்தும் குறைவினை நிவர்த்தி செய்ய இயலவில்லை. எனவே, கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்று காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.