லண்டன்: உலக கால்பந்து போட்டிகளில் கலக்கி வந்த நட்சத்திர விரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு வெளியேறினார். இரு தொடர்பாக அணி நிர்வாகத்துக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் அவர் வெளியேறியதாகவும்,  அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ. நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணி இணைந்துதான் தனது கால்பந்தாட்ட வாழ்வினை தொடங்கினார். கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , 2018-ம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், கடந்த ஆண்டு மான்செஸ்டர் அணியில் இணைந்தார். உலகின் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்து மான்செஸ்ட்ர அணிக்காக பிரிமியர் லீக் கோப்பை, சாம்பயன்ஸ் லீக் கோப்பை ஆகியவற்றை வென்றார். மேலும், கால்பந்து ஆட்டத்தின் மிக உயரிய தனி நபர் விருதான பாலோன் டி ஆர் விருதை 2008ஆம் ஆண்டில் வென்றார்.

இந்த நிலையில், அவருக்கும் அணி பயிற்சியாளர் எரிக் டென்னுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதுகுறித்து, ரோனால்டோ, பியர்ஸ் மார்கன் என்ற நிருபரிடம் ரொனால்டோ அளித்த பிரத்தியேக பேட்டியில் மேன்செஸ்டர் அணியை கடுமையாக சாடி கருத்துக்களை தெரிவித்தார். அணியில் தனக்கு செய்யப்பட்ட துரோகம் குறித்தும், வெளிப்படையாக பேசி இருந்தார். “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை .இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார். அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது.மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அணி குறிப்பிட்டுள்ளது.