லாஸ் ஏஞ்சல்ஸ்

ரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. ஏற்கனவே 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் மட்டைப்பந்து இடம் பிடித்தது.

வரும் 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. வரும் 2028ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கிரிக்கெட் போட்டியுடன் சேர்த்து ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்பட உள்ளது.

ஒரு வழியாகப்  போட்டியில் இருந்து  நீக்கப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும்  கொண்டு வர எடுக்கப்பட்ட நூறாண்டுக்கும் மேலாக நடந்த முயற்சிக்கு  வெற்றி கிடைத்துள்ளது. ரசிகர்கள் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.