கொரோனா காரணமாக சேலம் மாவட்டத்தில் ஒருவர் இன்று உயிரிழந்திருக்கிறார், இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,035 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 77, செங்கல்பட்டில் 34, திருவள்ளூரில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 67, திருநெல்வேலி 10, தூத்துக்குடி 6, சேலம் 36, கன்னியாகுமரி 23, திருச்சி 11, விழுப்புரம் 10, ஈரோடு 32, ராணிப்பேட்டை 13, தென்காசி 1, மதுரை 4, திருவண்ணாமலை 7, விருதுநகர் 6, கடலூர் 12,

தஞ்சாவூர் 3, திருப்பூர் 20, திண்டுக்கல் 11, தேனி 4, சிவகங்கை 3, புதுக்கோட்டை 5, கிருஷ்ணகிரி 28,

திருவாரூர் 4, பெரம்பலூர் 0, நாமக்கல் 15, கள்ளக்குறிச்சி 1, வேலூர் 5,

தருமபுரி 3, ராமநாதபுரம் 1, மயிலாடுதுறை 7, நீலகிரி 6, நாகப்பட்டினம் 2,

கரூர் 3, அரியலூர் 2, திருப்பத்தூர் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும், அந்தமான் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.

இன்று மொத்தம் 20,114 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 300 ஆண்கள் 212 பெண்கள் என மொத்தம் 512 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

575 பேர் இன்று குணமடைந்த நிலையில் 5,204 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.