சேலம்

பாஜக தலைவர் அண்ணாமலையின் கோரிக்கையை நிராகரித்த சேலம் நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானூஷ். சேலம் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து இருமதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த சேலம் 4-வது ஜுடிசியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கு அண்ணாமலை தடை வாங்கியதுடன் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். பியூஸ் மானூஷ் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இன்று இந்த வழக்கு சேலம் 4-வது ஜுடிசியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் அவரது சார்பில் அவர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  அவர் வழக்கை 3 மாதத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும் என ர் நீதித்துறை நடுவரிடம் கோரிக்கை வைத்தார்.

நீதிபதி அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணம் செய்வதால் அவரை நீதிமன்றத்திற்கு வரச்சொல்லுங்கள் எனக் கூறினார்.  மேலும் வழக்கை அடுத்தவிதம் (மார்ச் ) 2 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அன்று அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.